search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பி ஹரி ஓம் பாண்டே"

    நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் என பா.ஜ.க எம்.பி ஹரி ஓம் பாண்டே தெரிவித்துள்ளார். #BJP #HariOmPandey
    லக்னோ:

    மதம் சார்ந்த அரசியலை பா.ஜ.க முன்னெடுத்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து வரும் புகார்களை அவ்வப்போது அக்கட்சியைச் சேர்ந்த சிலர் உறுதி செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள், தலித் போன்ற சிறுபான்மையினர்கள் மீதான அவர்களின் கருத்து சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹரி ஓம் பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், விரைவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    மேலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள், கொலை போன்றவை அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க எம்பியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #HariOmPandey
    ×